#Breaking: 5,883 பேருக்கு இன்று கொரோனா உறுதி.. மாவட்ட வாரியாக சிக்கல்.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் கொரோனா வைரஸின் பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தினமும் அதிகரித்து கொண்டே வரும் கொரோனா பரவலின்  காரணமாக மக்கள் பீதியில் உறைந்துள்ளனர். அரசும் சோதனைகளை அதிகப்படுத்தி கொண்டே வருகிறது. மேலும், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளிலும் தீவிரமாக செயல்பட்டு வருகிறது.

நேற்றுவரை தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நபர்களின் எண்ணிக்கை 2,85,024 பேருக்கு கொரோனா உறுதியானது. மேலும், 2,27,575 பேர் பூரண நலன் பெற்று இல்லங்களுக்கு திரும்பியுள்ளனர். 4,690 பேர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

இந்த நிலையில், இன்று கொரோனாவால் 5,883 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,90,907 ஆக உயர்ந்துள்ளது. இன்று 5,043 பேர் பூரண நலன் பெற்றதையடுத்து, இதுவரையிலும் பூரண நலன் பெற்றவர்களின் எண்ணிக்கை 2,32,618 ஆக உயர்ந்துள்ளது. இன்று மட்டும் 118 பேர் பலியானதையடுத்து, மொத்த பலி எண்ணிக்கை 4,806 ஆக உயர்ந்துள்ளது.

மாவட்ட வாரியான பட்டியலில், சென்னையில் நேற்றுவரை 1,07,109 கொரோனா பாதிப்பு எண்ணிக்கை ஆக இருந்தது. இன்று மேலும் 986 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் சென்னையின் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,08,124 ஆக உயர்ந்துள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tamilnadu Corona virus Update 8 August 2020


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->