#Breaking: இன்று 5,914 பேருக்கு கொரோனா உறுதி.. தப்பித்த சென்னை மக்கள்.. சிக்கிய மாவட்டங்கள்.!!
Tamilnadu corona virus Update 10 August 2020
தமிழகத்தில் கொரோனா வைரஸின் பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தினமும் அதிகரித்து கொண்டே வரும் கொரோனா பரவலின் காரணமாக மக்கள் பீதியில் உறைந்துள்ளனர். அரசும் சோதனைகளை அதிகப்படுத்தி கொண்டே வருகிறது. மேலும், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளிலும் தீவிரமாக செயல்பட்டு வருகிறது.
இந்த நிலையில், இன்று கொரோனாவால் 5,914 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,02,815 ஆக உயர்ந்துள்ளது. இன்று 6,037 பேர் பூரண நலன் பெற்றதையடுத்து, இதுவரையிலும் பூரண நலன் பெற்றவர்களின் எண்ணிக்கை 2,44,675 ஆக உயர்ந்துள்ளது. இன்று மட்டும் 114 பேர் பலியானதையடுத்து, மொத்த பலி எண்ணிக்கை 5,041 ஆக உயர்ந்துள்ளது.
மாவட்ட வாரியான பட்டியலில், சென்னையில் நேற்றுவரை 1,09,117 கொரோனா பாதிப்பு எண்ணிக்கை ஆக இருந்தது. இன்று மேலும் 989 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் சென்னையின் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,09,117 ஆக உயர்ந்துள்ளது.
Tamil online news Today News in Tamil
English Summary
Tamilnadu corona virus Update 10 August 2020