தமிழகத்தில் மேலும் 50 பேருக்கு கரோனா.. டெல்லி சென்று திரும்பியவர்களுக்கு உறுதி..!!
tamilnadu corona virus positive symptoms
சென்னையில் சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் செய்தியாளர்களை சந்தித்தார். தமிழகத்தில் இன்று 57 பேருக்கு கரோனா உறுதியாகியுள்ளது. தமிழகத்தில் ஏற்கனவே 74 பேருக்கு கரோனா உறுதியாகியிருந்த நிலையில், தற்போது இது மேலும் அதிகரித்துள்ளது.
டெல்லியில் நடைபெற்ற முஸ்லீம் மாநாட்டில் கலந்து கொண்ட நபர்களுக்கு அதிகளவில் கரோனா உறுதியாகியுள்ளது. இவர்களில் இன்று மொத்தமாக 45 நபர்களுக்கு கரோனா உறுதியாகியுள்ளது.
இதனை தவிர்த்து 5 பேர் என 5 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. டெல்லிக்கு சென்ற நபர்களில் 531 பேர் கண்டறியப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அரசுக்கு தயவு செய்து ஒத்துழைப்பு கொடுங்கள். தாங்களாக முன்வந்து மருத்துவமனையில் அனுமதியாகும் பட்சத்தில் அரசு தேவையான நடவடிக்கையை மேற்கொள்ளும் என்று தெரிவித்தார்..
பாதிக்கப்பட்ட நபர்களில் 22 பேர் திருநெல்வேலி, 18 பேர் ஈரோடை சார்ந்தவர்கள் ஆவார்கள். இதனால் தமிழகத்தில் பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 124 ஆக உயர்ந்துள்ளது. மேலும், டெல்லி மாநாட்டில் கலந்துகொண்ட நபர்களை கண்டறியும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது என்று தெரிவித்தார்.
Tamil online news Today News in Tamil
English Summary
tamilnadu corona virus positive symptoms