மேலும் 7 பேருக்கு தமிழகத்தில் கரோனா உறுதி.. சுகாதாரத்துறை அறிவிப்பு..!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் நேற்றுவரை கரோனா வைரஸின் காரணமாக பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 67 ஆக இருந்தது. மேலும், நேற்று ஒரேநாளில் 17 பேருக்கு கரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டது. 

இவர்களில் பெரும்பாலானோர் டெல்லியில் நடைபெற்ற முஸ்லீம் மாநாட்டிற்கு சென்று வந்தவர்கள் என்பது உறுதியானது. இந்த நிலையில், தற்போது மேலும் 7 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால் தமிழகத்தில் கரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 74 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 43 வயதுடைய நபர் திருவண்ணாமலை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். 

மேலும், 28 வயது இளைஞர் உட்பட மூவருக்கு உறுதியாகியுள்ளது. இவர்கள் டெல்லியில் இருந்து திரும்பி வந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. இதனைப்போன்று மதுரை மருத்துவமனையில் டெல்லி சென்று வந்த இரண்டு நபர்களுக்கு கரோனா உறுதியாகியுள்ளது. இவர்களுக்கு தேவையான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tamilnadu corona virus confirmed additional 7 persons


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->