75 பேருக்கு கரோனா உறுதி.. 74 பேர் டெல்லி மாநாட்டில் இருந்து திரும்பியவர்கள்..!! - Seithipunal
Seithipunal


சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் செய்தியாளர்களை சந்தித்தார். இந்த செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் பேசிய சமயத்தில், தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்கள் குறித்த விபரத்தை தெரிவித்தார். 

இதன் மூலமாக இன்று கரோனா வைரசால் பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 309 ஆக உயர்ந்துள்ளது. மேலும், இன்று ஒரேநாளில் 75 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே டெல்லி மாநாட்டிற்கு சென்று வந்த நபர்களே அதிகளவு கரோனா வைரஸின் தாக்குதலுக்கு உள்ளாகியிருப்பது தெரியவந்துள்ளது. 

இந்த நிலையில், இன்றும் கரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. டெல்லிக்கு சென்று வந்த நபர்களின் குடும்பத்தினர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பில் உள்ளனர். நேற்று அரசின் அறிவுரையை ஏற்று பலரும் தாமாக முன்வந்து மருத்துவமனையில் அனுமதியாகினர். 

இன்று 75 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இவர்களில் 74 பேர் டெல்லி மாநாட்டில் கலந்து கொண்ட நபர்கள் ஆவார்கள். இவர்களின் பயண விபரம் குறித்த விபரம் சேகரிக்கப்பட்டு, தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், கரோனா பாதிக்கப்பட்ட மாவட்டமாக திருவள்ளூரும் சேர்ந்துள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tamilnadu corona symptoms positive


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->