24 ஆவது இடத்தில் இருந்த மாவட்டம் ஒரே நாளில் மேலே வந்த துயரம்! பரிதாபமான நிலையில் சென்னை!  - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் இன்று கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 69 என அரசுத் சுகாதார துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். இதன்மூலம் தமிழகத்தில் கொரோனா நோய் தொற்று ஏற்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை ஆனது, 690 ஆக உயர்ந்துள்ளது. 

இன்று மாவட்ட வாரியாக வெளியிட்டுள்ள பட்டியலில் வழக்கம்போல சென்னை முதலிடத்தைப் பிடித்துள்ளது. இன்று உறுதி செய்யப்பட்டுள்ள 69 பேரில் 39 பேர் சென்னையை சேர்ந்தவர்கள் என்ற அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகி உள்ளது. அதற்கு அடுத்தபடியாக திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த 13 பேருக்கு  உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை மூன்று பேர் மட்டுமே பாதிக்கப்பட்டிருந்தத திருப்பூர் மாவட்டத்தில் இன்று ஒரேயடியாக 13 பேர் பாதிக்கப்பட்டுள்ளது உறுதியாகி உள்ளது. 24 ஆவது இடத்தில் இருந்த திருப்பூர் இன்று 15 ஆவது இடத்திற்கு பட்டியலில் முன்னேறியுள்ளது.  அதற்கு அடுத்தபடியாக தூத்துக்குடி மாவட்டத்தில் 6 பேரும் மதுரை மாவட்டத்தில் ஐந்து பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். 

ஒட்டுமொத்தமாக சென்னை மாவட்டத்தில் 149 பேருக்கும், கோயம்புத்தூர் மாவட்டத்தில் 60 பேருக்கும், திண்டுக்கல் மாவட்டத்தில் 45 பேருக்கும், திருநெல்வேலி மாவட்டத்தில் 38 பேருக்கும், ஈரோடு மாவட்டத்தில் 32 பேருக்கும், திருச்சி மாவட்டத்தில் 30 பேருக்கும், நாமக்கல் மாவட்டத்தில் 28 பேருக்கும், ராணிப்பேட்டை மாவட்டத்தில் 27 பேருக்கும், செங்கல்பட்டு மதுரை மாவட்டத்தில் தலா 24 பேருக்கும், கரூர் தேனி மாவட்டத்தில் தலா 23 பேருக்கும், தூத்துக்குடி மாவட்டத்தில் 17 பேருக்கும், விழுப்புரம் திருப்பூர் மாவட்டங்களில் தலா 16 பேருக்கும், கடலூர் மாவட்டத்தில் 13 பேருக்கும், சேலம் திருவள்ளூர் திருவாரூர் விருதுநகர் தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் தலா 12 பேருக்கும், திருப்பத்தூர் திருவண்ணாமலை நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் தலா 11 பேருக்கும், கன்னியாகுமாரி காஞ்சிபுரம் மாவட்டங்களில் தலா ஆறு பேருக்கும், சிவகங்கை வேலூர் தலா ஐந்து பேருக்கும், நீலகிரி மாவட்டத்தில் நான்கு பேருக்கும், கள்ளக்குறிச்சி ராமநாதபுரம் மாவட்டங்களில் தலா இரண்டு பேருக்கும், அரியலூர் பெரம்பலூர் மாவட்டங்களில் தலா ஒருவருக்கு கொரோனா தொற்று  இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இன்னும் தென்காசி கிருஷ்ணகிரி தருமபுரி புதுக்கோட்டை ஆகிய நான்கு மாவட்டங்கள் கொரோனா தொற்று ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tamilnadu corona district update april 7


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->