தமிழகத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா! 3 பேருமே சென்னையில்!  - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா பாதிக்கப்பட்டுள்ளது உறுதியாகி உள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் மொத்தம் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது. 

பாதிக்கப்பட்ட மூன்று பேரும் சென்னையில் சிகிச்சையில் இருக்கிறார் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அவருடைய டுவிட்டரில் தெரிவித்துள்ளார். 65 வயதான ஆண் ஒருவர், நியூஸிலாந்தில் இருந்து திரும்பிய அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது. அதன் பிறகு லண்டனில் இருந்து திரும்பிய 25 வயது இளைஞருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்துள்ளது. 

இவர்களை அடுத்து சைதாப்பேட்டையைச் சேர்ந்த 55 வயது பெண்ணுக்கு தொற்று இருப்பது இருப்பது உறுதியாகி உள்ளது. இவர்கள் மூவரையும் தனிமைப்படுத்தி சிகிச்சை அளித்து வருவதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். இதன் மூலம் தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது. இதில் ஒருவர் மட்டும் சிகிச்சை பெற்று வீட்டிற்கு திரும்பி விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tamilnadu corona attacked count increased


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->