சசிகலா தரப்புக்கு உச்சக்கட்ட எச்சரிக்கை - தமிழக முதல்வர் பரபரப்பு பேச்சு.! - Seithipunal
Seithipunal


தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வரும் மே மாதம் நடைபெறவுள்ள சட்டப்பேரவை தேர்தலை எதிர்கொள்ளும் பொருட்டு, மக்களை நேரில் சந்தித்து அதிமுக அரசின் சாதனைகளை தெரிவித்து வாக்குகளை சேகரித்து வருகிறார். 

சொத்துகுவிப்பு வழக்கில் சிறையில் இருந்த சசிகலா, சிறையில் இருந்து விடுதலையாகி தமிழகம் வந்துள்ள நிலையில், ஓசூர் எல்லையில் இருந்து சென்னைக்கு அவரை அழைத்து செல்ல தென்மாவட்டத்தில் இருந்து ஆட்கள் வரவழைத்து கூட்டம் காண்பித்து அழைத்து செல்லப்பட்டார். இவரின் வருகை தமிழக அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்தும் என பலர் தெரிவித்து வந்தனர். 

இந்நிலையில், அதிமுகவை உடைக்க எதிரிகள் சதி செய்து வருகிறார்கள். அதிமுகவை யாராலும் உடைக்க முடியாது. கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்கள், மீண்டும் கட்சியில் இணைக்க வாய்ப்பில்லை. அவர்களை கட்சி தலைவணங்காது. அடிமட்ட தொண்டன் தான் இனி அதிமுகவின் முதல்வராக மாற முடியும். திட்டமிட்டு அதிமுகவை சிலர் கைப்பற்ற முயற்சி செய்கிறார்கள் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கிருஷ்ணகிரி தேர்தல் பிரச்சாரத்தில் தெரிவித்தார். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tamilnadu CM Warn Sasikala Supporters Krishnagiri Election Campaign 10 Feb 2021


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->