#Breaking: என்னைப்பற்றி ஏதும் சொல்லவில்லை என்றால், ஸ்டாலினுக்கு.... முதல்வர் பரபரப்பு பேச்சு.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் உள்ள பல மாவட்டங்களில் கொரோனா தடுப்பு பணிகள், நிறைவுபெற்ற பணிகளை ஆரம்பித்தல், புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டுதல் போன்ற நிகழ்வுகளுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேரடியாக சென்று வருகிறார். அந்த வகையில், நேற்று கோயம்புத்தூர் மாவட்டத்திற்கு சென்று இருந்தார்.

இந்நிலையில், தற்போது சேலம் மாவட்டத்தில் உள்ள வனவாசியில் அதிமுக நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேசுகையில், " திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அறைக்குள் இருந்துவிட்டு அறிக்கை மட்டுமே வெளியிடுகிறார். தமிழகம் முழுவதும் ஏரிகள், குளங்கள் தூர்வாரப்பட்டுள்ளது. என்னை பற்றி எதாவது அவதூறு பரப்பினால் மட்டுமே மு.க ஸ்டாலினிற்கு தூக்கம் வரும். 

மூன்றரை வருடங்கள் எனது தலைமையிலான நல்லாட்சி நடந்து வருகிறது. மக்களுக்கு தேவையான ஒரு ஆக்கபூர்வ விஷ்யத்தையாவது எதிர்க்கட்சிகள் கூறியுள்ளதா?. எதிர்க்கட்சிகள் என்பது கெட்ட எண்ணத்தோடு செயல்படக்கூடாது. மக்களின் நன்மையை அவர்கள் கருத்தில் கொண்டு பேச வேண்டும் " என்று தெரிவித்தார்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tamilnadu CM Speech at Salem 19 November 2020


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->