சர்வதேச போட்டிகளில் தங்கம் வென்றால் ரூ.3 கோடி, வெள்ளிக்கு ரூ.2 கோடி பரிசு - தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில், விளையாட்டு வீரர்களுக்கான கொரோனா தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாமை தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதனைத்தொடர்ந்து, விளையாட்டு வீரர்களிடையே அவர் உரையாற்றினார்.

இந்த உரையில், " தோனி மைதானத்தில் சிக்ஸர் அடித்தால் மைதானத்தில் இருப்பவர்களில் இருந்து, அதனை நேரலையில் தொலைக்காட்சியில் பார்ப்பவர்கள் வரை சிக்ஸர் அடித்தது போல உணர்கிறோம். கால்பந்தில் ரொனால்டோ கோல் அடித்தால் மைதானத்தில் இருப்பவர்களில் இருந்து, அதனை நேரலையில் தொலைக்காட்சியில் பார்ப்பவர்கள் வரை சிக்ஸர் அடித்தது போல உணர்கிறோம்.

இந்திய அளவிலும், உலக அளவிலும் நாம் பல வெற்றியை அடைந்து, சீனா மற்றும் அமெரிக்கா, ஜப்பான் போன்ற நாடுகளை போல பெரும் சாதனை படைக்க வேண்டும். விளையாட்டு வீரர்களுக்கு என்னென்ன உதவிகள் தேவைகள் என்பது எனக்கு தெரியும்.

சர்வதேச அளவில் நடைபெறும் போட்டிகளில் கலந்துகொண்டு தங்கப்பதக்கம் வெல்பவர்களுக்கு ரூ.3 கோடி, வெள்ளிப்பதக்கம் வெல்பவர்களுக்கு ரூ.2 கோடி, வெண்கலம் வெல்பவர்களுக்கு ரூ.1 கோடி பரிசு வழங்கப்படும். தமிழக வீரர்களே சென்று வருக, தரணியை வென்று வருக.! " என்று தெரிவித்தார்.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tamilnadu CM MK Stalin Speech at Nehru Indoor Stadium 26 June 2021


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->