ஒரே நாடு.. ஒரே ரேஷன் திட்டம்.. துவங்கி வைத்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி..!!
Tamilnadu CM Edappadi Palanisamy Start One Nation One Ration Scheme
சென்னையில் நடைபெறும் நிகழ்வில் 'ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு' திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைத்தார். தூத்துக்குடி, தஞ்சாவூர், விருதுநகர், ராமநாதபுரம், மதுரை, திருவண்ணாமலை ஆகிய ஆறு மாவட்டங்களில் வரும் 15ம் தேதி முதல் இத்திட்டம் அமலாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
'ஒரே நாடு ஒரே ரேஷன்' திட்டத்திற்கான கடை ஒன்றிற்கு வழக்கத்தைவிட 5 விழுக்காடு கூடுதல் உணவு பொருட்கள் அனுப்பப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் தமிழக மக்களும், புலம்பெயர் தொழிலாளர்களும் பயன்பெறுவார்கள் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
ஆதார் அட்டையை மையமாக கொண்டே ஸ்மார்ட் ரேஷன் கார்டு தயாரிக்பட்டுள்ளதால், அதில் இடம்பெற்றுள்ள குடும்ப உறுப்பினர்கள் மட்டும் விரல் ரேகை பதிவு செய்து அரிசி உள்ளிட்ட ரேஷன் பொருட்களைப் பெற்றுக்கொள்ள முடியும். 32 மாவட்டங்களில் விரல் ரேகை பதிவு செய்யும் பணிகள் முழுமையாக முடிவடைந்து விட்டதாகவும், 6 மாவட்டங்களில் வருகிற 15-ஆம் தேதிக்குள் பணிகள் முடிக்கப்படும் என கூட்டுறவு மற்றும் உணவு வழங்கல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்தை துவங்கி வைத்தார்.
English Summary
Tamilnadu CM Edappadi Palanisamy Start One Nation One Ration Scheme