ஓசி பிரியாணி, அழகு நிலையம், பாலியல் அத்துமீறல் என திமுகவை பஞ்சர் ஆக்கிய தமிழக முதல்வர்..!
Tamilnadu CM Edappadi Palanisamy Speech about DMK Illegal Activities abusing
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நாமக்கல் மாவட்டத்தில் உள்ள திருச்செங்கோட்டில் வைத்து தேர்தல் வாக்குசேகரிப்பு பிரச்சாரத்தில் ஈடுபட்டார். இதன் போது அவர் பேசுகையில், " மின்சாரத்துறை அமைச்சர் சரியான நிர்வாகத்துறையை மேற்கொண்டு வருவதால், தமிழகத்தில் உபரி மின்சாரம் தயாராகி வருகிறது. தமிழகத்தில் புதிய தொழில்கள் வருகிறது. இந்தியாவிலேயே இல்லாத அளவு 60 ஆயிரம் கோடி அளவில் முதலீடு ஈர்க்கப்ட்டுள்ளது.
கடந்த 2019 ஆம் வருடத்தில் நடைபெற்ற தொழில்முதலீட்டு மாநாட்டின் மூலமாக, 10 இலட்சம் பேர் வேலைவாய்ப்பு பெறுவார்கள். தேசிய அளவில் உணவு தானிய உற்பத்தியை பெருகியுள்ளோம். போக்குவரத்துத்துறை, மின்சாரத்துறை, நீர்மேலாண்மை, சட்டம் ஒழுங்கு, உடல் உறுப்பு மாற்று சிகிச்சையில் என பல துறைகளில் தேசிய அளவிலான விருதுகளை வாங்கியுள்ளது.
சட்டம் ஒழுங்கை மீறி செயல்பட்டால், அவர்கள் இரும்பு கரம் கொண்டு ஒடுக்கப்பட்டுள்ளார்கள். திமுகவின் ஆட்சியில் நிலஅபகரிப்பு போன்ற பல்வேறு பிரச்சனைகள் இருந்தது. திமுகவினர் பரோட்டா கடைக்கு சென்று சாப்பிட்ட பணம் கொடுக்க மறுத்து மூக்கை உடைத்தனர். மறுநாள் ஸ்டாலின் சென்று கட்டப்பஞ்சாயத்து செய்கிறார். திமுக தலைவர் கட்டப்பஞ்சாயத்து தலைவராகியுள்ளார்.
திமுக மாவட்ட செயலாளர் அழகுநிலையத்திற்கு சென்று பெண்களை கால்களால் உதைக்கிறார். செல்போன் கடையில் செல்போன் வாங்கிவிட்டு கடையின் உரிமையாளரை தாக்குகின்றனர். கோவையில் இருந்து சென்னைக்கு வந்த கர்ப்பிணி பெண்ணிடம் அத்துமீறிய திமுக பிரமுகர் கைது செய்யப்படுகிறார். இந்தியா டுடேயின் சிறந்த சட்டம் ஒழுங்கை பராமரிக்கும் மாநிலமாக தமிழகம் இருக்கிறது " என்று தெரிவித்தார்.
Tamil online news Today News in Tamil
English Summary
Tamilnadu CM Edappadi Palanisamy Speech about DMK Illegal Activities abusing