#Breaking: சட்டப்பேரவையில் வ.உ.சி படம்.. காவேரி - குண்டாறு இணைப்பு திட்டம் செயல்பாடு... முதல்வர் அறிவிப்பு.!
Tamilnadu CM Edappadi Palanisamy Pressmeet Sivaganga 4 December 2020
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இந்த செய்தியாளர்கள் சந்திப்பில், " சிவகங்கை மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் சிறப்பாக எடுக்கப்பட்டுள்ளது. இதனால் கொரோனா வைரஸ் பரவல் கட்டுக்குள் இருக்கிறது.
சிவகங்கையில் 5393 மகளிருக்கு மானிய விலையில் இரு சக்கர வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளது. சிவகங்கை மருத்துவக்கல்லூரியில் மருத்துவ கல்விக்கான இடங்களின் எண்ணிக்கை 150 ஆக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
காவேரி - குண்டாறு இணைப்பு திட்டம் ரூ.14 ஆயிரம் கோடி மதிப்பில் நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது. இந்த காவேரி - குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு ஜனவரி மாதம் அடிக்கல் நாட்டி பணிகள் தொடங்கப்படும். சுதந்திர போராட்ட தியாகி மற்றும் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சியின், திண்டிவனம் ராமசாமி ரெட்டியார் ஆகியோரின் முழு உருவ படம் சட்டப்பேரவையில் வைக்கப்படும் " என்று தெரிவித்தார்.
Tamil online news Today News in Tamil
English Summary
Tamilnadu CM Edappadi Palanisamy Pressmeet Sivaganga 4 December 2020