29 ஆம் தேதி முக்கிய ஆலோசனையில் தமிழக முதல்வர்.. வெளியான அதிகாரபூர்வ தகவல்.!!
Tamilnadu CM Edappadi palanisamy meeting with district collectors
வரும் வெள்ளிக்கிழமையான 29 ஆம் தேதியன்று அணைத்து மாவட்ட ஆட்சியருடன் முதல்வர் ஆலோசனை மேற்கொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. காணொளிவாயிலாக இந்த ஆலோசனை நடைபெறவுள்ளதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நான்காம்கட்ட ஊரடங்கு முடிவடையவுள்ள நிலையில், மாவட்டங்களின் நிலவரம் குறித்து ஆலோசனையா மேற்கொள்ள உள்ளதாகவும், வெள்ளிக்கிழமை காலை 10 மணியளவில் இந்த ஆலோசனை காணொளி வாயிலாக நடைபெறும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மாநகராட்சி ஆணையர்களுடன் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை மேற்கொள்ளவுள்ளதாகவும், மேலும் வழங்கப்படக்கூடிய தளர்வுகள், மாவட்டங்களில் தற்போதைய நிலைமை, எடுக்கப்படவேண்டிய நடவடிக்கை தொடர்பாகவும் விவாதிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மாவட்ட ஆட்சியர்களுடனான ஆலோசனையில் பல்வேறு தகவல்கள் மற்றும் முக்கிய ஆலோசனைகள் ஏற்கனவே வழங்கப்பட்ட நிலையில், தற்போதைய ஆலோசனை கூட்டமானது மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது.
Tamil online news Today News in Tamil
English Summary
Tamilnadu CM Edappadi palanisamy meeting with district collectors