"தொட்டில் பழக்கம் சுடுகாடு வரை" - எட்டணா சம்பவத்தை வைத்து சக்கை போடுபோட்ட முதல்வர்.! - Seithipunal
Seithipunal


தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றார். தற்போது வேலூரில் உள்ள கந்தனேரியில் மக்களிடம் திறந்த வேனில் இருந்தவாறு, பிரச்சாரம் மேற்கொண்டு வாக்குகளை சேகரித்தார். 

இதன்போது, தமிழக முதல்வர் பேசுகையில், " திமுக தலைவராக இருக்கும் மு.க ஸ்டாலின் நான் (முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி) விவசாயிகளின் வாயில் விஷம் ஊற்றுவதாக கூறுகிறார். விவசாயத்தை பற்றி ஒற்றுமே தெரியாமல், விவசாயங்களுக்காக என போலியாக போராட்டம் நடத்தி வரும் மு.க. ஸ்டாலின் இனியும் விவசாயிகள் குறித்து அவதூறாக பேசினால் அது நன்மையை விளைவிக்காது. 

மறைந்த முதல்வர் அண்ணா மு.க. ஸ்டாலினிடம் தேநீர் மற்றும் வடை வாங்கி வர 3 ரூபாய் கொடுத்தால், அதில் 8 காசுகளை திருடி வைத்துக்கொள்வதாக அவரே கூறியுள்ளார். அன்றில் இருந்தே கொள்ளையடிக்க மு.க. ஸ்டாலின் துவங்கியுள்ளார். தொட்டில் பழக்கம் சுடுகாடு வரை என்பதை போலத்தான், இன்று வரை திமுக இருந்து வருகிறது " என்று தெரிவித்தார்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tamilnadu CM Edappadi Palanisamy Election Campaign Vellore 9 Feb 2021


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->