நாங்க என்ன கிழிச்சோமோ அதைத்தான் விளம்பரம் செய்கிறோம்.. நீ கொஞ்சம்..., தமிழக முதல்வர் பரபரப்பு பேச்சு.! - Seithipunal
Seithipunal


நாங்கள் செய்ததை தான் ஊடகங்கள் வாயிலாக விளம்பரம் செய்து வருகிறோம் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள கையனூரில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். இதன்போது பேசுகையில், " நாங்கள் என்ன செய்தோம் என்பதை தான் விளம்பரம் செய்கிறோம். நாங்கள் என்ன கிழித்தோம் என்பதை தான், ஊடகங்கள் மூலமாக விளம்பரம் செய்துள்ளோம். 

நாங்கள் செய்துள்ள திட்டங்களை கூறினால், அதனை எதிர்க்கட்சித்தலைவர் மறுக்க இயலுமா?. பெரிய மாநிலமாக இருந்த வேலூர் மாவட்டதை பிரித்து, மக்களுக்கு பணிகள் விரைந்து கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

உள்ளாட்சி அமைப்புகளில் மகளிருக்கு 50 விழுக்காடு இடம் அதிமுக மட்டுமே கொடுத்தது. கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தமிழகத்தில் அதிகளவு உருவாக்கப்பட்டுள்ளது. 11 மருத்துவ கல்லூரிகளை அதிமுக அரசு கொண்டு வந்திருக்கிறது. தமிழகம் முழுவதும் 30 இலட்சம் மனுக்கள் வாங்கப்பட்டு, 5 இலட்சம் மனுக்கள் முழுமையான தீர்வு காணப்பட்டுள்ளது " என்று தெரிவித்தார். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tamilnadu CM Edappadi Palanisamy Election Campaign 9 Feb 2021 Ranipet


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->