துரைமுருகனின் சொத்து விபரம் வெளியாகுமா?.. - தமிழக முதல்வர் கேள்வி.! - Seithipunal
Seithipunal


தமிழக முதலவர் எடப்பாடி பழனிச்சாமி கோவை விமான நிலையத்தில் வைத்து செய்தியாளர்களை சந்தித்தார். இந்த செய்தியாளர்கள் சந்திப்பில், "திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் பொய்யான அறிக்கை வெளியிட்டுள்ளார். ஊழலுக்கு சொந்தக்காரர் திமுகவினர் தான். அன்று துரைமுருகனின் சொத்து விபரம் எவ்வுளவு?. இன்று சொத்து விபரம் எவ்வுளவு?. துரைமுருகனின் கல்லூரியே ஊழல் செய்து கட்டப்பட்டது தான். 

இந்திய வரலாற்றிலேயே நாடாளுமன்ற தேர்தல் பணப்பட்டுவாடா காரணமாக நிறுத்தப்பட்டு வேலூர் தொகுதியில் தான். இது குறித்த வழக்குகள் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. துரைமுருகனின் படிப்பு செலவுகளுக்கு எம்.ஜி.ஆர் உதவி செய்ததாக அவரே கூறியுள்ளார். 

பலரும் அவரிடம் கூறியுள்ளார்கள். இன்று இத்துனை சொத்துக்கள் எப்படி வந்தது?. முன்னாள் மேயர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் மா.சுப்பிரமணியம் சிப்கோவில் பணியாற்றும் நபர்களுக்கு நிலம் ஒதுக்கப்பட்ட நிலையில், அந்த நிலத்தை வாங்கி கட்டிடமும் கட்டியுள்ளார். அவர் எங்களின் மீது குற்றம் சுமத்தியுள்ளார் " என்று தெரிவித்தார்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tamilnadu CM Edappadi Palanisamy Asks DuraiMurugan DMK Asset Documents


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->