தீரன் சின்னமலையின் படையில் இருந்த பொல்லானுக்கு நினைவு மண்டபம் - தமிழக முதல்வர் அறிவிப்பு.!
Tamilnadu CM Announce Govt celebration of Birthday Freedom Fighter Maaveran Pollan
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் களமிறங்கியுள்ளார். தமிழகம் முழுவதும் மக்களை சந்தித்து, அதிமுகவின் சாதனைகளை எடுத்துரைத்து வாக்குகளை சேகரித்து வருகிறார்.
மக்களை சந்தித்து தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வரும் முதல்வர், அவ்வப்போது மக்களுக்கான திட்டங்களையும் அறிவித்து வருகிறார். இன்று நாமக்கல் மாவட்டத்தில் உள்ள குமாரபாளையம் பகுதியில் நடைபெற்ற அருந்ததியர் மாநாட்டில் கலந்துகொண்டார்.
இதன்போது, அதிமுக அரசு அருந்ததியர் மக்களுக்கு செய்துள்ள உதவிகளை எடுத்துரைத்த நிலையில், இறுதியாக தீரன் சின்னமலை கவுண்டரின் படையில் இருந்த பொல்லான் அவர்களின் பிறந்தநாள் விழா அரசு விழாவாக சிறப்பிக்கப்படும் என்றும், அவர்களுக்கு மணிமண்டபம் அமைக்கப்படும் என்றும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.
Tamil online news Today News in Tamil
English Summary
Tamilnadu CM Announce Govt celebration of Birthday Freedom Fighter Maaveran Pollan