#Breaking: கொரோனா கூடினால் கடுமையான கட்டுப்பாடுகள் - தமிழக அரசு உச்சகட்ட எச்சரிக்கை.!
Tamilnadu Chief Secretary Warn Corona Outbreak rules to TN Peoples 9 April 2021
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், தமிழக அரசு நேற்று பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து அறிவிப்பு வெளியிட்டது. இந்நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மேலும் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் நேற்று நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில், தமிழக தலைமை செயலாளர் கலந்துகொண்டார். இந்த கூட்டத்தில், தமிழக தலைமை செயலாளர் கொரோனா கட்டுப்பாடுகள் குறித்து பேசியிருந்தார்.
இது தொடர்பாக அவர் பேசுகையில், " தற்போதையை கட்டுப்பாடுகளுக்கு மக்கள் ஒத்துழைப்பு தர மறுத்து, கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரிக்கும் பட்சத்தில் கட்டாயம் இரவு நேர கடுமையான ஊரடங்கை அமல்படுத்த நேரிடும் என்றும், பல அதிரடி கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் " என பேசியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Tamil online news Today News in Tamil
பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.
English Summary
Tamilnadu Chief Secretary Warn Corona Outbreak rules to TN Peoples 9 April 2021