ஸ்டாலின் பச்சை பொய் சொல்கிறார்!! ஆதாரத்துடன் படம் பிடித்து காட்டிய தமிழக முதல்வர்! - Seithipunal
Seithipunal



நான்கு சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வரும் 19 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான பிரச்சாரத்தில் அரசியல் கட்சியினர் ஈடுப்பட்டுள்ளனர். கரூர் மாவட்டம் அவரக்குறிச்சி தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தல் 19 ஆம் தேதி நடைபெறவுள்ளது. அந்த தொகுதியில் அதிமுக வேட்பாளராக  போட்டியிடும் வி.வி செந்திநாதனை ஆதரித்து தமிழக முதல்வர் இரண்டாம் கட்ட பிரச்சாரத்தை மேற்கொண்டார்.

பிரச்சாரத்தில் ஈடுபட்ட முதலமைச்சர் பேசுகையில் தற்போது நடைபெறும் இடைத்தேர்தல் யாரால் நடைபெறுகிறது என்று பொதுமக்களுக்கு நன்கு தெரியும். அந்த துரோகி தான் தற்போது திமுகவிற்கு சென்று வேட்பாளராக போட்டியிடுகிறார்.

செந்தில் பாலாஜியை முன்பு இகழ்ந்து பேசிய ஸ்டாலின், தற்போது புகழ்ந்து பேசி நாடகமாடுகிறார். இதனை மக்கள் ஒருபோதும் நம்ப மாட்டார்கள். செந்தில் பாலாஜி அமைச்சராக இருந்த போது அவரை விமா்சித்த மு.க.ஸ்டாலின் தற்போது அவருக்காக அரவக்குறிச்சியில் வாக்கு சேகரிப்பதாக முதல்வா் பழனிசாமி விமா்சித்துள்ளாா்.

மேலும், அரவக்குறிச்சி சட்டமன்ற இடைத்தோ்தலில் செந்தில் பாலாஜி போட்டியிடும் நிலையில், 5 ஆண்டுகளில் 2 கட்சிகளில் நின்று போட்டியிடும் ஒரே வேட்பாளா் செந்தில் பாலாஜி தான் என்று விமர்சித்துள்ளார்.

விலாசம் கொடுத்த அதிமுகவுக்கு துரோகம் செய்த செந்தில் பாலாஜி மக்களுக்கு எப்படி நல்லது செய்வார்? மு.க.ஸ்டாலின் பச்சை பொய் சொல்கிறார். ஆள் கடத்தல் வழக்கில் சிக்கிய செந்தில் பாலாஜி எனது தகுதியை பற்றி பேச தகுதி இல்லை என்று ஸ்டாலின் பேசியிருக்கிறார். இது திமுகவின் கட்சி பத்திரிகையான முரசொலி பத்திரிக்கையில் வந்திருக்கிறது. என கூறி அந்த பத்திரிகையும் மக்களிடம் வழங்கினார் முதல்வர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tamilnadu chief minister talk about M.K.stalin


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->