தமிழக இராணுவ வீரர்களின் குடும்பத்தாருக்கு அரசு வேலை வாய்ப்பு.!! அதிரடியாக அறிவித்த தமிழக முதல்வர்.!!
tamilnadu chief minister announce to govt jobs army officers family
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் இருக்கும் துணை இராணுவ வீரர்கள் சென்ற வாகனத்தின் மீது நடந்த வெடிகுண்டு தாக்குதலில் சுமார் 40 க்கும் மேற்பட்ட இராணுவ வீரர்கள் பரிதாபமாக பலியாகினர்.
இந்த இராணுவ வீரர்களில் இரண்டு பேர் தமிழகத்தை சார்ந்தவர் என்ற தகவல் வெளியாகி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்திய இராணுவ வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர் என்ற தகவல் வெளியான தகவலை கேட்டே மீள முடியாமல்., தவித்து வந்த நிலையில் இந்த தகவலானது வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அரியலூர் மாவட்டத்தில் இருக்கும் உடையார்பாளையம் தாலுகாவிற்கு உட்பட்ட தா.பழூர் கார்குடி கிராமத்தை சார்ந்த சிவச்சந்திரன் மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கயத்தாறு சவலாப்பேரி மேலத் தெருவை சார்ந்த சுப்பிரமணியன் ஆகியோர் வீரமரணம் அடைந்தனர். இவர்களின் வீரமரணத்திற்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்தியும்., மவுன அஞ்சலி செலுத்தியும் வருகின்றனர்.
இந்நிலையில்., தமிழத்தின் முதல்வரான எடப்பாடி.பழனிச்சாமி இரண்டு இராணுவ வீரர்களின் குடும்பத்தாருக்கு அரசு வேலை வழங்குவதாக தெரிவித்துள்ளார். ஜம்மு காஷ்மீரில் உள்ள புல்வாலாவில் நடைபெற்ற தாக்குதலில் வீரமரணம் அடைந்த இராணுவ வீர்களின் குடும்பத்தில் இருக்கும் ஒருவருக்கு அரசு வேலைவாய்ப்பு வழங்குவதாக தெரிவித்துள்ளார்.
English Summary
tamilnadu chief minister announce to govt jobs army officers family