சட்டப்பேரவை தேர்தல் 2021: கால நீட்டிப்பு அவசியம் இருக்காது - தமிழக தலைமை தேர்தல் அதிகாரி..! - Seithipunal
Seithipunal


தமிழகம் முழுவதும் சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவுகள் காலை 7 மணிமுதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. தமிழக வாக்காள பெருமக்கள் தங்களின் வாக்குகளை பதிவு செய்ய காலை முதலாகவே வாக்குச்சாவடி மையங்களுக்கு வருகை தந்து வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர். 

கொரோனா பரவல் காரணமாக முகக்கவசம் உட்பட கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளுடன் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. வாக்குச்சாவடி மையங்களில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் நிலையில், பதற்றமான வாக்குச்சாவடிகளில் துணை இராணுவ படையினர் களமிறக்கப்பட்டுள்ளனர். 

இந்நிலையில், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யப்ரதா சாகு செய்தியாளர்களை சந்தித்தார். இந்த செய்தியாளர்கள் சந்திப்பில், " தமிழகத்தில் தேர்தல் அமைதியாக நடைபெற்று வருகிறது. பிற புகார்கள் ஏதும் வரவில்லை. ஒரு வாக்குச்சாவடி மையத்தில் 1000 பேர் வாக்களிக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. 

தமிழகம் முழுவதும் கூடுதல் வாக்குச்சாவடிகள் தேவையான அளவு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனால் சம்பந்தப்பட்ட வாக்குசாவடியில் நிமிடத்திற்கு 4 பேர் வாக்களிக்கலாம் என்ற அடிப்படையில், வாக்குகள் அனைத்தும் பதிவாகும். இதனால் கால நீட்டிப்பு தேவையிருக்காது " என்று பேசினார். 

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tamilnadu Chief Election Commissner Sathya Pratha Sahoo Pressmeet 6 April 2021 8 AM


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->