பிப்ரவரி 2 ஆம் தேதி ஆளுநர் உரையுடன் சட்டப்பேரவை கூட்டத்தொடர்..! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் வரும் மே மாதம் தேர்தல் நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், தேர்தல் பிரச்சாரங்களில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இதனைப்போல, தமிழகத்தில் இறுதிக்கட்ட சட்டப்பேரவை நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டது. 

இந்நிலையில், பிப்ரவரி மாதம் 2 ஆம் தேதி சட்டப்பேரவை கூடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி மாதத்தின் இரண்டாம் தேதி சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெறும் என்றும், கலைவாணர் அரங்கில் இக்கூட்டத்தொடர் நடைபெறும் என்றும் சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் அறிவித்துள்ளார். 

மேலும், இந்த சட்டப்பேரவை வருடத்திற்கான முதல் கூட்டம் என்பதால், ஆளுநரின் உரையுடன் சட்டப்பேரவை கூட்டம் நடைபெறும் என்றும், சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெறும் நாட்கள் குறித்து அலுவலக குழு ஆய்வு செய்து முடிவை அறிவிக்கும் என்றும் தெரிவித்துள்ளார். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tamilnadu Assembly Starts 2 February 2021


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->