தமிழகத்தில் 10 மாவட்டங்களுக்கு மழை... அறிவிப்பை வெளியிட்ட சென்னை வானிலை ஆய்வு மையம்.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் கடந்த சில மாதமாகவே வறண்ட வானிலையானது நிலவி வந்தது. மேலும், அதிகரித்து வந்த வெயிலால், ஊரடங்கில் வீட்டில் இருந்த மக்கள் பெரும் இன்னல்களுக்கு உள்ளாகினர். இந்த நிலையில், தமிழகத்தின் தென்மாவட்டப்பகுதிகளில் மழை பெய்தது. 

நேற்று, தமிழகத்தின் தென் மாவட்டம் மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலை பகுதியை சார்ந்த சில மாவட்டத்தில் நல்ல மழை பெய்தது. இந்த விஷயம் தொடர்பாக சென்னை வானிலை மைய அதிகாரி புவியரசன் பேசிய சமயத்தில், 

தமிழகத்தில் நிலவிவரும் மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பசலனத்தின் காரணமாக நீலகிரி, தேனி, கோயம்புத்தூர், ஈரோடு, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், திருப்பூர், கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி மாவட்டத்தில் லேசான மழை அல்லது மிதமான மழை பெய்யலாம். 

பிற மாவட்டங்களை பொறுத்த வரையில் வறண்ட வானிலை நிலவும் என்றும், தலைநகர் சென்னையை பொறுத்த வரையில் வெப்பத்தின் தாக்கம் குறைவாக இருக்கும் என்றும் தெரிவித்தார். இது வெயிலின் தாக்கம் குறைய நல்ல வாய்ப்பாக இருப்பதால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tamilnadu 10 district have rain for today


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->