அவர்களை சுட்டு கொள்ள காரணம் இது தான் - தமிழிசையின் ஆவேச பேச்சு.!  - Seithipunal
Seithipunal


கருணையே இல்லாதவர்களுக்கு கருணை காட்டக்கூடாது என்று தமிழிசை கூறி இருக்கின்றார்.

தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் சென்னை கோயம்பேட்டில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றினார், அப்போது, "பெண்கள் பாதுகாப்பாக வளர வேண்டிய சூழ்நிலையை தாண்டி, ஒரு ஆண் பெண்களுக்கு எவ்வாறு மரியாதை தர வேண்டும் என்பதை கற்றுத்தந்து ஆண்களை வளர்க்க வேண்டும். 

ஒரு பெண் புன்னகையுடன் வீட்டை விட்டு வெளியேறி மீண்டும் அதே புன்னகையோடு அவர் வீடு திரும்புகிறாளா என்றால் அது நடக்காத விஷயமாக தான். இருக்கிறது.

Image result for WOMEN SEITHIPUNAL

கட்டுப்பாடு இல்லாத இன்றைய சூழலில் பெண்கள் கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. பெண்களுக்கு முன்னுரிமை தருகிறோம் என்று கூறி கொண்டு குத்துவிளக்கை கொள்ளிக்கட்டையாக பார்க்கின்றனர். தயவு செய்து பெண்களை பூத்து குலுங்க விடுங்கள், மொட்டுகளை கனிய விடுங்கள். அதை ஆரம்பத்திலேயே கசக்கி எறியாதீர்கள். 

பெண்கள் அடுப்பு முன்பு வேகக்கூடாது என்பதற்காக பிரதமர் நடவடிக்கை எடுத்துவரும் நிலையில், பெண்களையே எரித்து உள்ளனர். கருணையே இல்லாதவர்களுக்கு கருணை காட்டக்கூடாது. " என்று அவர் தெரிவித்து இருக்கின்றார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TAMILISAI SPEECH ABOUT ENCOUNTER


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->