"இருந்து..உலகிற்கு...பாடம் கற்பிக்காமல் இறந்து பாடம் கற்பித்துள்ளான்" - தமிழிசை சௌந்தரராஜன்.!
tamilisai soundararajan says about sujeeth death
குழந்தை சுஜித் இழப்பு குறித்து தெலுங்கானா கவர்னர் தமிழிசை தெரிவித்துள்ள அஞ்சலியில், சுஜித் இறப்பு மிகுந்த மன வேதனை அளிக்கிறது. குழந்தையின் இழப்பு இந்த உலகிற்கு பல பாடங்களை கற்பித்து இருக்கின்றது. இனிமேல் இத்தகைய நிகழ்வுகள் நடைபெறாமல் இருப்பதற்கு நாம் அனைவருமே முயற்சி செய்ய வேண்டும். இந்த மரணம் சாதாரணமானது அல்ல.
சுஐித் மரணம்..வேதனை அளிக்கிறது இருந்து..உலகிற்கு...பாடம் கற்பிக்காமல் இறந்து பாடம் கற்பித்துள்ளான். பிஞ்சு குழந்தையின் துடிதுடித்த மரணம் பலபேர் இருந்து போதித்த பாடங்களை விட இறந்து பல பாடங்களை போதித்து இருக்கின்றது.
மேலும், மீட்பதற்கு கடுமையான போராட்டங்கள் நடத்தி இருந்தாலும் உயிரோடு மீட்காதது மிகுந்தமனவருத்தத்தை அளிக்கின்றது. மீண்டு வரவேண்டுமென்ற பிரார்த்தனை பலிக்காமல் போய் விட்டது.
இம்மாதிரியான நிகழ்வுகள் இனிமேல் நடைபெறாமல் இருக்க நாம் ஒவ்வொருவரும் பொறுப்பேற்க வேண்டும், என்று தெரிவித்திருந்தார்.
English Summary
tamilisai soundararajan says about sujeeth death