எதிர்க்கட்சிகளுக்கு எச்சரிக்கை விடுக்கும் தமிழிசை.! பரபரப்பு பேட்டி.!
tamilisai says about opposite party
பாஜக தமிழக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், செய்தியாளர்களிடம் பேசிய பொழுது, "திமுக எம்பிக்கள் ஒரு செயற்கையான தமிழ் பற்றை தான் உணர்த்துகின்றனர்.
மேலும், ஒரே நாடு., ஒரே தேர்தல் என்ற கொள்கையை நாங்கள் கட்டாயப்படுத்த வேண்டிய அவசியம் ஏற்படவில்லை.
ஏனெனில், நாட்டின் பல மாநிலங்களில் ஆட்சி புரிவது பாஜகதான். மத்தியில் பெரும்பான்மையுடன் ஆட்சி செய்து வருகிறோம். நாட்டுக்கு நல்லது செய்ய வேண்டும் என்பதால்தான் இதுபோன்ற திட்டங்களை முன் நிறுத்துகிறோம். ஜனநாயக முறைப்படி தான் அனைத்தும் எடுத்துச்செல்லப்படுகிறது.
பாஜக கொண்டு வருகிறது என்ற ஒரே காரணத்திற்காக ஒரே நாடு ஒரே தேர்தல் கொள்கையை சில எதிர்கட்சிகள் எதிர்க்கின்றன இதுபோன்ற அடாவடி சூழ்நிலை இருக்க கூடாது" என அவர் தெரிவித்தார்.
English Summary
tamilisai says about opposite party