இதை செய்தால் தண்ணீர் கிடைத்துவிடுமா.? கொந்தளிக்கும் தமிழிசை.!
tamilisai says about admk yagam
தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு கடுமையான வறட்சி ஏற்பட்டுள்ளது. பல இடங்களில் முன்னதாகவே குடிநீர் பஞ்சம் இருந்த போதிலும், சென்னையை அந்த விஷயம் அதிகம் பாதிக்கப்பட்ட பின்னர் தான் அதிகளவில் பேசப்படுகிறது.
இந்நிலையில், தண்ணீர் பிரச்சனைக்கு தேர்வு வேண்டும் என பல கட்சியினர் கோரிக்கை விடுத்தும், போராட்டம் நடத்தியும் வருகின்றனர். மழை வேண்டி யாகம் நடத்தும் வேலையில் தற்பொழுது அதிமுக இறங்கியுள்ளது.
இந்நிலையில், இரண்டு நாட்களாக சென்னை உட்பட பல இடங்களில் மழை பெய்து வருகின்றது. இதுகுறித்து பாஜக தமிழக தலைவர் தமிழிசை, " திமுகவினர் யாகம் நடத்தினாலும், சரி யோகா நடத்தினாலும் சரி எதிர்க்கின்றனர்.
ஆனால் போராட்டம் நடத்துகின்றனர். போராட்டம் நடத்தினால் தண்ணீர் வந்து விடுமா? யாகம் நடத்திதால் தான் மழை பெய்துள்ளது" என அவர் தெரிவித்துள்ளார்.
English Summary
tamilisai says about admk yagam