பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டுமல்ல!! பெற்றோருக்கும் சேர்த்து ஒரு மெசேஜை கூறிய தமிழிசை!!
tamilisai says about 10th results
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. தேர்வுகள் எழுதிய மாணவ, மாணவிகளில் 95.2 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி விகிதத்தில் திருப்பூர் மாவட்டம் முதல் இடத்தை பிடித்துள்ளது.
இந்நிலையில் பல்வேறு அரசியல் தலைவர்களும், தேர்ச்சி பெற்ற மாணவ மாணவிகளுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அதே போல், தேர்ச்சிபெறாத மாணவர்களுக்கு ஆறுதல் அளித்து வருகின்றனர்.
இந்நிலையில், பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தனது வாழ்த்துக்களை மாணவர் மாணவிகளுக்கு தெரிவித்துள்ளார். இது குறித்து, தனது ட்வீட்டர் பக்கத்தில், "பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற அனைத்து மாணவச்செல்வங்களுக்கும் வாழ்த்துகள்.
தேர்ச்சிபெற முடியாத செல்வங்கள் மனம்தளராமல்,வருங்காலத்தில் அசுரபலத்ததுடன் வெற்றிபெற தன்னம்பிக்கையோடு முன்னேறவேண்டும் தேர்ந்தவர்களுக்கு வாழ்த்து சொல்லும் சுற்றம்,சோர்ந்தவர்கள் வாடாமல் பார்த்து கொள்ளவேண்டும்." என தெரிவித்துள்ளார்.
English Summary
tamilisai says about 10th results