தமிழகத்தில் இடியுடன் கூடிய கனமழை.! வானிலை மையத்தின் அறிவிப்பால் கொண்டாட்டத்தில் மக்கள்.!!
tamilandu have a thunder rain weather report announce
தமிழகத்தில் வெயில் இரண்டு மாதங்களாக சுட்டெரித்து வருகிறது. அனல் காற்று வீசுவதால் பொதுமக்கள் வெளியில் செல்வதற்கு சிரமப்பட்டு வருகின்றனர். கோடை வெப்பத்தை தணிக்கும் வகையில் ஒரு சில இடங்களில் மழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்கள் சற்று மகிழ்ச்சியில் உள்ளனர்.
தமிழகத்தில் பல மாவட்டங்களில் வெயிலின் தாக்கத்தால் கடுமையான அனல் காற்று வீசி வருகிறது. மேலும் தண்ணீர் பிரச்சினை பொது மக்களின் தீவிர தலைவலியாக மாறியுள்ளது.
தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், வெப்பச்சலனம் மற்றும் தென்மேற்கு பருவக்காற்று ஆகியவற்றின் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் ஒரு சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
தற்போது சென்னையில் ஒரு சில பகுதியில் மழை செய்துள்ளது. குறிப்பாக பூந்தமல்லி, ஐயப்பன்தாங்கல், போரூர், ஆவடி, மதுரவாயல் ஆகிய இடங்களில் மழை பெய்து வருகிறது. மேலும் பல இடங்கள் சாரல் மழை பெய்துள்ளது. இதனால் வெப்பம் தனித்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகிறது. இந்த நிலையில்., தமிழகத்தில் மீண்டும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை., திருவள்ளூர்., கன்ஸிபுரம்., காஞ்சிபுரம் மற்றும் கடலூர் போன்ற மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும்., தமிழக கடலோர மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும்., சென்னையை பொறுத்த வரையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
tamilandu have a thunder rain weather report announce