நான் வெறும் வேலைக்காரன் தான்.. நீங்கள் தான் முதல்வர்கள் - தமிழக முதல்வர் நெகிழ்ச்சி பேச்சு.! - Seithipunal
Seithipunal


மக்கள்தான் முதலமைச்சர், மக்கள் சொல்வதை செய்யும் வேலைக்காரனாக தான் பணியாற்றி வருகிறேன் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வரும் மே மாதம் நடைபெறவுள்ள சட்டப்பேரவை தேர்தலை எதிர்கொள்ளும் பொருட்டு, மக்களை நேரில் சந்தித்து அதிமுக அரசின் சாதனைகளை தெரிவித்து வாக்குகளை சேகரித்து வருகிறார். 

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆம்பூர் மகளிர் அமைப்பினர் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த கூட்டத்தில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்று சிறப்புரையாற்றினார். இதன்போது பேசுகையில், " பெண்கள் முன்னேற்றத்திற்கு தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. 

மகப்பேறு உதவித் தொகை ரூ.12 ஆயிரத்தில் இருந்து ரூ.18 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்பட்டதால், சுமார் 67 இலட்சம் பெண்கள் பயன்பெற்றுள்ளனர். மக்கள்தான் எனக்கு முதலமைச்சர். மக்கள் சொல்வதை செய்யும் வேலைக்காரனாக மட்டுமே நான் பணியாற்றி வருகிறேன். 

சமூக வலைதளங்களில் தமிழக அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் பரப்பும் பொய் பிரச்சாரத்தை முறியடிக்க வேண்டும். மீண்டும் அதிமுகவின் தலைமையிலான அரசு ஆட்சியை அமைத்து, மக்களுக்கான பணிகளை தொடர்ந்து செய்யும் " என்று பேசினார்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tamilandu CM Edappadi palanisamy Speech at Tirupattur Ambur Election Campaign 10 Feb 2021


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->