தமிழக விவசாயிகளுக்கு ஆதரவாக.! மீண்டும் போராட்டத்தில் களமிறங்கிய மாணவர்கள்.!!
tamil nadu students starting protest against hydrocarbon plan
தஞ்சையில் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு விவசாயிகள் கைதானதை கண்டித்தும் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் மாணவர்கள் சாலைமறியல் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.
தஞ்சையிலுள்ள டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டம் மற்றும் மீத்தேன் உள்ளிட்ட திட்டங்களை செயல்படுத்தி வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் கடுமையாக போராடி வருகின்றனர். அந்த வகையில் தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஹைட்ரோகார்பன் திட்டத்தை கைவிட வலியுறுத்தி விவசாயிகள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால் அவர்களை காவல்துறையினர் கைது செய்து செய்ததால் இதை கண்டித்தும் தஞ்சை மாணவர்கள் ஹைட்ரோகார்பன் திட்டத்தை எதிர்த்து மருதுபாண்டியர் கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.
முழக்கமிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் திடீரென தேசிய நெடுஞ்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின் போது மத்திய மாநில அரசுக்கு எதிராகவும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தியும் முழக்கமிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
English Summary
tamil nadu students starting protest against hydrocarbon plan