தமிழகத்தில் 34 ஆவது மாவட்டம்? துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் வெளியிட்ட அதிரடி தகவல்!!  - Seithipunal
Seithipunal


விழுப்புரம் மாவட்டத்தை பிரித்து கள்ளக்குறிச்சி தனி மாவட்டமாக உருவாக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த சில தினங்களுக்கு முன் சட்டப்பேரவை கூட்டத்தில் அறிவித்தார். இந்த அறிவிப்பால், தமிழகத்தில் 33-வது மாவட்டமாக கள்ளக்குறிச்சி உதயமாகிறது. 

இதையடுத்து, ஒரு மாவட்டடத்திற்கு 12 இலட்சம் என்ற வீதத்தில், தமிழகத்தை 60 மாவட்டங்களாக பிரிக்க வேண்டும் என பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்தார். 

இந்நிலையில், கோவை, திருப்பூர் மாவட்டங்களின் சில பகுதிகளை இணைத்து, பொள்ளாச்சி மாவட்டம் உருவாக்க முதலமைச்சரிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது என துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டு மக்கள் விரும்பாத எந்த ஒரு திட்டத்தையும் அதிமுக அரசு செயல்படுத்தாது எனவும் ஜெயராமன் தெரிவித்தார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tamil Nadu Deputy Shabanaykar Press Meet


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->