இந்த வருடம் எப்படி?.. இந்த வருடத்தில் எதற்கு முக்கியவத்துவம்?... ஐ.பி.எஸ் அதிகாரி சைலேந்திர பாபு..! - Seithipunal
Seithipunal


ஐ.பி.எஸ் காவல் அதிகாரி சைலேந்திர பாபு பல ஊக்கமளிக்கும் விஷயங்களையும், உடலை கட்டுக்கோப்புடன் வைத்துக்கொள்ளும் விஷயங்களையும், நமது மனதை மகிழ்ச்சியுடன் வைத்துக்கொள்ளும் விஷயங்கள் என பல விஷயங்களை தனது இணையப்பக்கங்களில் பதிவு செய்வார். இந்நிலையில், தற்போது ஒரு வீடியோ பதிவு செய்துள்ளார்..

இது குறித்த வீடியோவில், " லாக்டவுன் ஆரம்பித்து 100 நாட்கள் ஆகிவிட்டது. இதனால் பலரும் பல விதமான மனஉளைச்சலில் இருக்கின்றனர். இது தொடர்பான பல தகவல்கள் இருக்கிறது. குடும்ப தலைவர்கள் ஆகிய தந்தைமார்களும், குடும்பத்தை கவனித்து வந்த மகன்களும், மகள்களும் தங்களின் பணிகளை இழக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. 

இதுபோன்ற கவலையில் இருக்கும் நபர்களுக்கு உங்களின் தந்தைக்கும், சகோதரிக்கும், சகோதரர்களுக்கும் ஆறுதல் கூறுங்கள்.. விடுங்கள் பார்த்துக்கொள்ளலாம். இந்த வருடம் உயிரை காக்க வேண்டிய வருடம். 

நமக்கு மூச்சு உள்ளது.. நமக்கென தன்மானம் இருக்கிறது. நாங்கள் இருக்கிறோம் என்று உங்களின் பெற்றோருக்கு ஆறுதல் கூறுங்கள். ஜேக் மா என்ற அலிபாபா நிறுவனத்தின் நிறுவனர் இந்த 2020 ஆம் வருடம் வருமானத்தை ஈட்ட கூடிய வருடம் கிடையாது.. நாம் நமது உயிரை காக்கும் வருடம்.. அடுத்த வருடத்தில் தொழிலை கவனித்துகொள்ளலாம் என்று கூறினார். 

2021 ஆம் வருடத்திற்கு பின்னர் நாம் அனைத்தையும் பார்த்துக்கொள்ளலாம். இந்த சூழ்நிலை நிலைத்து இருக்காது. குழந்தைகளே நீங்கள் இல்லத்திலேயே இருங்கள்.. இந்த கொரோனவை நாம் வென்று காட்டுவோம். கட்டாயம் அனைவரும் மாஸ்க் அணிந்து, சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் " என்று கூறியுள்ளார். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

SylendraBabuIPS inspire video about covid19 lockdown


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->