'கால் தூசு கூட பெறாத சொறி நாய்..' பத்திரிக்கையாளரை கடுமையாக விமர்சித்த எஸ்.வி. சேகர்!!
S.V. Sekar Twitter post
உலகம் முழுவதும் கரோனா வைரஸ் பரவி மக்கள் அனைவரையும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. சீனாவில் தொடங்கிய வைரஸ் தற்போது இந்தியாவிலும் வேகமாக பரவி கொண்டு வருகிறது.
இந்த நிலையில் இந்திய நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனவே மக்கள் அனைவரும் வீட்டிற்குள் முடங்கி கிடக்கிறார்கள்.
இதுகுறித்து இந்திய பிரதமர் மனதின் குரல் நிகழ்ச்சியின் மூலமாக மக்களிடம் பேசினார். அப்போது அவர் இந்த ஊரடங்கு உத்தரவை நாள் எளிய மக்கள் படும் கஷ்டத்துக்கு மன்னிப்பு கேட்கிறேன் என்று குறிப்பிட்டு இருந்தார்.
அதாவது திடீரென ஊரடங்கு அறிவித்ததால் மக்கள் கடும் கஷ்டத்திற்கு உள்ளாகியுள்ளனர். எனவே ஊரடங்கு அறிவித்து போதே மக்கள் வீட்டிலேயே இருப்பதற்கு சலுகையை அறிவித்து இருக்கலாம் அப்படி எதுவும் செய்யாமல் திடீரென்று ஊரடங்கு பிறப்பித்த தால் தொழிலாளர்கள் பட்டினியால் பாதிக்கப்பட்டனர். எனவே இதற்காக மோடி மன்னிப்பு தெரிவித்திருந்தார்.
இதனை பத்திரிக்கையாளர் ஒருவர் பிடித்து பக்கத்தில் பகிர்ந்து ஒன்றிரண்டு வேலையா பண்ணி இருப்பேன் உன்னை மன்னிக்க என்று மோடியை விமர்சித்த ஷேர் செய்திருந்தார்.
இதற்கு பாஜகவை சேர்ந்த எஸ்.வி. சேகர் கொதித்தெழுந்து அவரது டுவிட்டர் பக்கத்தில் அதற்கு பதில் அளித்து இருந்தார். அதில் "நம் நாட்டின் பிரதமருக்கு கால் தூசி கூட பெறாத சொறி நாய் எல்லாம் அவரை பார்த்து குறைக்கிறது" என்று குறிப்பிட்டுள்ளார்.
எஸ்.வி. சேகரின் இந்த அநாகரிகமான பதிவிற்கு பாஜக தொண்டர்களும் வரவேற்பு தெரிவித்து இருந்தனர். அதே சமயத்தில் பலரும் அவரது இந்த பதிவுக்கு கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.