தமிழகத்தில் 8 நகரங்களில் 100 டிகிரியை தாண்டிய வெயில்.!
Sun exceeds 100 degrees in 8 cities in Tamil Nadu
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயில் சுட்டெரித்து வருவதையடுத்து பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
வானிலை ஆய்வு மைய அறிவிப்பின்படி தமிழகத்தில் நேற்று 8 நகரங்களில் 100 டிகிரிக்கும் அதிகமாக வெயிலின் தாக்கம் இருந்ததாக தெரிகிறது.
அதன்படி அதிகபட்சமாக வேலூர் மற்றும் திருச்சியில் 104 டிகிரியும், கரூரில் 103 டிகிரியும் வெயில் கொளுத்தியது.
மே மாதம் நான்காம் தேதி அக்னி நட்சத்திரம் ஆரம்பிக்க இருக்கும் நிலையில், கத்திரி வெயிலின் தாக்கம் இன்னும் அதிகரிக்கும் என்பதால் பொதுமக்கள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும் என்றும் குறிப்பாக குழந்தைகள் மற்றும் முதியவர்கள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
English Summary
Sun exceeds 100 degrees in 8 cities in Tamil Nadu