எக்ஸ்ரே அறையில் தனியாக இருந்த ஊழியருக்கு ஏற்பட்ட விபரீதம்.!
suicide in x-ray room
மதுரை நரிமேட்டில் அமைந்திருக்கும் தனியார் மருத்துவமனை ஒன்றில் ஆறுமுகம் (வயது 25) என்பவர் டிரைவராக வேலை பார்த்து வந்துள்ளார். ஆறுமுகம், திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த கோடாங்கிப்பட்டியைச் சேர்ந்தவர் ஆவார்.
கடந்த 10-ந் தேதி மருத்துவமனையிலேயே தங்கி வேலை பார்த்து வந்த ஆறுமுகம் திடீரென காணாமல் பொய் இருக்கின்றார். அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் பல இடங்களில் தேடி அலைந்துளார். காவல் துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னர் மருத்துவமனையில் அவரை தேடிய போது மருத்துவமனை வளாகத்தில் இருக்கும் எக்ஸ்ரே அறையில் தூக்கில் பிணமாக ஆறுமுகம் தொங்குவது தெரியவந்துள்ளது. எதற்காக அவர் தற்கொலை செய்து கொண்டார்.? என மருத்துவமனையில் இருந்தவர்கள் குழம்பி இருந்தனர்.
காவல் துறையினர் விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். குடும்ப பிரச்சினை காரணமாக எடுத்த தற்கொலை முடிவா.? என்பது குறித்து தல்லாகுளம் காவல் துறையினர் ஆராய்ந்து வருகின்றனர்.