வயித்துல சிசு...மனசுல சோகம்..விழுப்புரத்தில் விபரீதம்.! காப்பாற்றாமல் கணவன் செய்த செயல்.!  - Seithipunal
Seithipunal


விழுப்புரம் மாவட்டத்தில் இருக்கும், திருவெண்ணைநல்லூர் அடுத்த ஆனந்தூர் என்ற கிராமத்தில் வசித்து வரும் கணேஷ் பாபு (28) வேன் டிரைவராக இருக்கின்றார். கடந்த 7 மாதத்திற்கு முன்பு தொட்டிமேடு என்ற பகுதியைச் சேர்ந்த சூர்யா என்ற பெண்ணுடன் இவருக்கு திருமணம் நடைபெற்றுள்ளது. 

சூர்யா தற்போது ஐந்து மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். இந்நிலையில் கணவன், மனைவி இருவருக்கும், அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. சம்பவ தினத்தன்று, கணேஷ் பாபுவிற்கும், சூர்யாவிற்கும் ஏற்பட்ட சண்டையில் கணேஷ் ஆத்திரமடைந்து கர்ப்பிணி என்றும் பாராமல் சூர்யாவை அடித்து இருக்கின்றார். 

Image result for SUICIDE SEITHIPUNAL
 
இதன் காரணமாக மனமுடைந்து அழுதுகொண்டிருந்த சூர்யா திடீரென எழுந்து அறைக்கு உள்ளே சென்று  தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டு இருக்கின்றார். இதை பார்த்து கொண்டிருந்த கணேஷ் பாபு,  சூர்யாவின் பெற்றோருக்கு செல்போன் மூலமாக நடந்தவற்றை தெரிவித்துள்ளார். 

அவர்கள் பதறியடித்து ஓடிவந்து தூக்கில் தொங்கிய மகளை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்ற போது பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளார். இதனை கேட்ட சூர்யாவின் குடும்பத்தார்கள் கதறி அழுதுள்ளனர். பின்னர் இதுகுறித்து கணேஷ் பாபு மீது காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில், கணேஷ் பாபு மற்றும் அவரது தாய் ஆகியோரை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

SUICIDE IN VILLUPURAM


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->