மனைவி இறந்து ஒரு மாதத்தில், கணவர் செய்த காரியம்.! உறவினர்கள் அதிர்ச்சி.!  - Seithipunal
Seithipunal


திருக்கனூர் அருகே இருக்கும் காலனியில் பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்த சுப்பராயன் என்பவருக்கு 75 வயது. இவர் கூலி தொழிலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். இவர்க்கு கோசலை என்ற மனைவியும், ஒரு மகன் மற்றும் இரண்டு மகள்களும் இருந்தனர்.

மகன் மற்றும் மகள்களுக்கு திருமணம் ஆகிவிட்டது. கடந்த 28 நாட்களுக்கு முன்னதாக இவருடைய மனைவி கோசலை உடல்நலக்குறைவு காரணமாக திடீரென இறந்து போயுள்ளார். மனைவி இறந்த நாள் முதல் சுப்பராயன் மிகவும் சோகத்துடன் இருந்து வந்துள்ளார்.

இப்படிப்பட்ட நிலையில் ஞாயிற்றுக்கிழமை கோசலையின் முப்பதாம் நாள் நிகழ்ச்சி நடைபெற இருந்தது. ஆனால், அதற்குள்ளாக சுப்புராயன் மனைவியை பிரிந்த சோகம் தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்துள்ளார்.

 suicide seithipunal

நேற்று இரவு வீட்டில் அனைவரும் தூங்கிய பின்னர், வீட்டில் இருக்கும் தோட்டத்திற்கு சென்று சுப்புராயன் துண்டினால் அங்கிருந்த மரத்தில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இதுகுறித்து அவர் மகன் சுதாகர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தார். திருக்கனூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

suicide in thirukkanur


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->