கணவன் தான் முக்கியம் என கர்ப்பிணி செய்த காரியத்தால் விபரீதம்.!
suicide in porur
சென்னை போரூரில் வசித்து வந்த பிரவீன் குமார் என்பவர், தன்னுடன் கல்லூரியில் ஒன்றாக படித்த இளந்தென்றல் என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். இளந்தென்றலும் பிரவீண்குமாரை காதலிப்பதாக ஒப்புக்கொண்டுள்ளார்.
இந்நிலையில், இருவரும் காதலித்து பின்னர் மணமுடிக்க முடிவு எடுத்துள்ளனர். திருமணமும் செய்து கொண்டு போரூர் காரம்பாக்கத்திலேயே பிரவீன் வீட்டில் வசித்து வந்துள்ளனர்.
இளந்தென்றல் தற்பொழுது எட்டு மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். இந்நிலையில், கடந்த மாதம் 18-ம் தேதி சாலை விபத்தில் எதிர்பாராத விதமாக பிரவீன் குமார் விபத்தில் உயிரிழந்துள்ளார். கணவரின் இழப்பை தாங்க முடியாத நிலையில். மிகுந்த மன அழுத்தத்திற்கும் அவர் ஆளாகி இருக்கின்றார்.
இந்நிலையில், நேற்று காலை கணவரின் குடும்பத்துடன் வசித்து வந்த இளந்தென்றல் மனமுடைந்து தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். வெகுநேரமாகியும் அறையை விட்டு வெளியில் வராமல் மருமகள் இருந்ததால் சந்தேகமடைந்த மாமனார் கதவை உடைத்து உள்ளே சென்றார். அங்கு தூக்கில் தொங்கிய மருமகளை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார்.