கழிவறை கட்டித்தரவில்லை என பதைபதைப்பை உருவாக்கிய மனைவி.! நெல்லை சம்பவம்.!
suicide in nellai
வள்ளியூர் அருகே, தனது கணவர் வீட்டில் கழிவறை கட்டி தராததால் மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
7 ஆண்டுகளுக்கு முன் நெல்லை மாவட்டம், களக்காடு சிதம்பரபுரத்தை, சேர்ந்த ஷாலினிக்கும், சசிகுமார் என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 3 குழந்தைகள் இருக்கின்றனர்.
வீட்டில் கழிவறை கட்டி தரச்சொல்லி திருமணம் நடந்தது முதலே ஷாலினி கணவரிடம், சண்டையிட்டுள்ளார். ஆனால், 7 ஆண்டுகளாக காலதாமதம் தாழ்த்தி வந்துள்ளார். இதனால் அதிகப்படியான சண்டை வந்துள்ளார்.
இதுபோலவே, ஞாயிற்றுக்கிழமையும், இதுகுறித்து வாக்குவாதம் நடைபெற்றது. இதனால் மனம் உடைந்த ஷாலினி தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். என சசிகுமார் குடும்பத்தினர் தகவல் கொடுத்துள்ளனர்.
ஆனால், ஷாலினி குடும்பத்தினார், என் மகளை சசிகுமார் குடும்பத்தினர் அடித்து கொன்றுள்ளனர் என கூறி வருகின்றனர்.