யூடியூப் வீடியோக்களை பார்த்து, சிறுமி செய்த காரியம்.!! அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள்.!!
suicide in nakpur girl
தற்கொலை சம்பந்தப்பட்ட வீடியோக்களை யூடியூப்பில் பார்த்த சிறுமி ஒருவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலத்தில், நாக்பூரைச் சேர்ந்த ரதோட் என்பவருக்கு ஷிகா என்ற 12 வயது சிறுமி இருந்துள்ளார். அவர் தனது தந்தையின் மொபைலில் யூடியூப் சேனல்களை அடிக்கடி விசிட் செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார். குறிப்பாக தற்கொலை சம்பந்தப்பட்ட வீடியோக்களை விரும்பிப் பார்த்து வந்துள்ளார்.
இது குறித்து தனது தாயிடம் பலமுறை அவர் தெரிவித்துள்ளார். இருப்பினும் அவர் இதனை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. இந்நிலையில், நேற்று முன்தினம் மாலையில் வீட்டில் உள்ள ஒரு தனி அறையில் எலாஸ்டிக் கையிற்றை கொண்டு ஷிகா மின் விசிறியில் தூக்குபோட்டு தொங்கினார்.
அப்பொழுது அந்த சிறுமியின் சகோதரி சத்தம் கேட்டு வந்து அந்த அறையில் பார்த்தபொழுது ஷிகா தூக்கில் தொங்குவதை பார்த்து அதிர்ச்சி அடைந்து கத்தி பெற்றோரை அழைத்து உள்ளார். இதைக் கேட்டு அலறியடித்து ஓடிவந்த பெற்றோர், தூக்கில் இருந்து கீழே இறக்கி நாக்பூரில் இருக்கும் அரசு மருத்துவமனை ஒன்றில் சேர்த்துள்ளனர்.
இருப்பினும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. குழந்தைகளிடம் இருந்து செல்போனை தூரமாக வைத்திருப்பது மிகவும் அவசியமானது என போலீசார் பொது அறிவுரைகளை வழங்கி வருகின்றனர்.
Tamil online news Today News in Tamil