திருமணம் ஆகாத ஏக்கத்தால் முரட்டு சிங்கள் எடுத்த விபரீத முடிவு..!
suicide for not get marriage
தமிழகத்தில் குமரி மாவட்டத்தில் கருங்கல்லை அடுத்த பெருமான்குழி புள்ளத்து விளை பகுதியை சேர்ந்தவர் பிரபு( 35) இவர் ஒரு தொழிலாளி.
மேலும் இவர் அடிக்கடி குடித்துவிட்டு சரியாக வேளைக்கு போகாமல் வீட்டிலே இருந்துவிடுவார். இவருக்கு திருமணமும் ஆகாமலே இருந்தது. இதனால் மிகுந்த மனவேதனை அடைந்துள்ளார்.
இந்த சம்பவம் நடந்த அன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். வெளிய சென்ற பெற்றோர் திரும்பி வந்து பார்த்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இந்த சம்பவம் குறித்து கருங்கல் போலீசில் புகார் செய்தனர். உடனே அந்த இடத்திற்கு வந்த போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தார்.
தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
English Summary
suicide for not get marriage