நடந்து சென்ற மாணவன் திடீர் உயிரிழப்பு.. காவல்துறை விசாரணை..!
Sudden death of a walking student
நடந்து சென்ற மாணவன் திடீரென உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டம் மங்களபுரத்திலுள்ள மதர் தெரசா கல்லூரியில் B, SC பிசியோதெரபி முதலாமாண்டு படித்து வருகிறார் கோகுல்ராஜ். இந்நிலையில், நேற்று மாலை கல்லூரி மைதானத்தில் நடந்து சென்றார்.
அப்போது, அவர் திடீரென மயங்கி விழுந்த அவரை அருகில் இருந்து அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
மேலும்,அவரின் இடது காதிலிருந்து ரத்தம் வந்திருப்பதால் உடலை பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் அவரின் இறப்பிற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
English Summary
Sudden death of a walking student