காதலன் மரணத்தால், பிரிவு தாங்காமல் விஷம் குடித்த காதலி!! - Seithipunal
Seithipunal


கடலூர் மாவட்டம் கரும்பூர் குச்சிப்பாளையம் பகுதியை சேர்ந்த பார்த்தீபன்(26) என்பவர் என்ஜினீயரிங் படித்துள்ளார். அதே பகுதியை சேர்ந்த செல்வகுமாரி(20) என்பவர் கடலூர் அரசு கல்லூரியில் பி.காம் படித்து வருகிறார். இந்நிலையில் பார்த்தீபனுக்கும், செல்வகுமாரிக்கும் இடையே பழக்கம் ஏற்பட நாளடைவில் அது காதலாக மாறியது. 

செல்வகுமாரியின் காதல் விவகாரம் அவரது பெற்றோருக்கு தெரியவந்தது. இதனால் ஆத்திரமடைந்த செல்வகுமாரியின் தந்தை செல்வகுமாரிக்கு வேறொரு இடத்தில் மாப்பிள்ளை பார்த்துள்ளார். திருமணம் செய்ய ஏற்பாடுகளும் நடந்தன.

இது பார்த்தீபனுக்கு தெரிய வந்தது. இதனால், மனம் உடைந்த பார்த்திபன் நேற்று முன்தினம் இரவு வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். தனது காதலன் தற்கொலை செய்து கொண்ட தகவல் அறிந்த செல்வ குமாரி மிகுந்த மனவேதனைக்கு உள்ளானார்.

மிகவும் சோகமாக வலம் வந்து கொண்டிந்த செல்வகுமாரி, வீட்டில் யாருடனும் பேசமறுத்து தனிமையில் இருந்து வந்தார். இந்நிலையில் இன்று காலை வீட்டில் வைத்து இருந்த வி‌ஷத்தை குடித்து மயங்கி விழுந்தார். இதனை கண்ட அவரது பெற்றோர்கள் அலறி அடித்து கொண்டு செல்வகுமாரியை மீட்டு சிகிச்சைக்காக பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு செல்வகுமாரிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சை பலனின்றி மேல்சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று வருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

sucide for love


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->