எஸ்ஐ பூமிநாதன் கொலை வழக்கில் திடீர் திருப்பம்.. மேலும் ஒருவர் கைது.!! - Seithipunal
Seithipunal


திருச்சி மாவட்ட்டம் நாவல்பட்டு காவல் நிலையத்தில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் பூமிநாதன், வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம், தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிறப்புக் காவல் உதவி ஆய்வாளர் பூமிநாதன் கடந்த 19 ஆம் தேதி  இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருக்கும் போது, சந்தேகத்துக்கிடமான வகையில் ஆடு திருடிய இரண்டு நபர்களை அவர் பிடித்து விசாரணை செய்துள்ளார். அப்போது அவர்கள் தப்பி ஓட முயற்சித்தனர். இதனால் அவர்களை பூமிநாதன் மற்றும் சித்திரவேல் என்ற காவலரும் துரத்தி சென்று உள்ளனர். 

புதுக்கோட்டை மாவட்டம், பள்ளப்பட்டி ரயில்வே சுரங்கப்பாதை அருகே அந்த இரண்டு திருடர்களை மடக்கிப் பிடித்த சிறப்பு காவல் ஆய்வாளர் பூமிநாதன், காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளார். திருடர்களை நான் பிடித்து வைத்துள்ளேன். நீங்கள் உடனே வாருங்கள் என்று தகவல் கொடுத்துள்ளார். ஆனால், திருடர்கள் தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியை கொண்டு பூமிநாதனை வெட்டிப் படுகொலை செய்துள்ளனர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

இதையடுத்து, குற்றவாளிகளை பிடிக்க 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. சிறப்பு உதவி ஆய்வாளர் கொலை வழக்கில் மணிகண்டன் என்பவரை தனிப்படை காவல்துறையினர் கைது செய்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர். 

இந்நிலையில், சிறப்பு உதவி ஆய்வாளர் பூமிநாதன் கொலை வழக்கில் தொடர்பாக மேலும் ஒருவரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

sub inspector murdered case update


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->