படப்பையில் வாலிபர்கள் கதவை மூட, மும்பையில் மணி அடிக்க, மணி எடுக்க போனோர் மணிமங்கலம் காவல்நிலையம் போன பரிதாபம்!  - Seithipunal
Seithipunal


யூ டியூப் வீடியோ பார்த்து  வங்கி ஏடிஎம்யை கொள்ளை அடிக்க முயன்ற கல்லூரி மாணவர்கள் இருவர் காவல் துறையிடம் சிக்கினர். அவர்களிடம் மணிமங்கலம் காவல்துறை தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

காஞ்சிபுரம் மாவட்டம் கீழ் படப்பை கரசங்கால் பகுதியில் அமைந்துள்ளது பஞ்சாப் நேஷனல் வங்கியின் ஏடிஎம் மையம். இந்த மையத்தின் கதவினை வாலிபர்கள் இருவர் மூடி விட்டு ஏடிஎம் இயந்திரத்தை உடைக்க முயற்சி போது, அதிலுள்ள சமிங்கை மூலம் மும்பை தலைமை அலுவலகத்திற்கு தகவல் சென்றது. 

உடனடியாக மும்பை அலுவலகத்தில் இருந்து ஓட்டேரி காவல் நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளனர். ஓட்டேரி மற்றும் மணிமங்கலம் காவல்துறை விரைந்து வந்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டு கொண்டிருந்த இரு வாலிபர்களை கையும் களவுமாக பிடித்தனர். 

அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் காஞ்சிபுரத்தை சேர்ந்த இறையன்பு மற்றும் யோகேஷ் என்பதும், இருவரும் தனியார் கல்லூரி மாணவர்கள் என்பதும் தெரியவந்தது. அவர்கள் அளித்த வாக்குமூலத்தில் யூடியூபில் இருக்கும் வீடியோக்களை பார்த்து ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி செய்வதாக தெரிவித்துள்ளனர்..

ஏடிஎம் சென்டர்களில் கொள்ளையடிக்க இணையதளத்தை பார்த்து கற்றுக் கொண்டதாக கூறிய தகவலை கேட்டு அதிர்ச்சி அடைந்த போலீசார். மேலும் இது போன்று ஏதேனும் வங்கி கிளைகளில் முயற்சி செய்து உள்ளனரா  என மணிமங்கலம் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Students try to robbery in bank ATM at padapapai kanchipuram


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->