12ஆம் வகுப்பு மாணவி தூக்கு போட்டு தற்கொலை.! போலீசார் விசாரணை.!
Student suicide in Thoothukudi
தூத்துக்குடி மாவட்டத்தில் 12ஆம் வகுப்பு மாணவி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டம் தெளிச்சாத்தநல்லூர் பகுதியை சேர்ந்தவர் இராமநாதன். இவரது மகள் வைத்தீஸ்வரி (17) தூத்துக்குடி ஒட்டப்பிடாரம் அருகே உள்ள ஒரு தனியார் பள்ளி விடுதியில் தங்கி பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்தார்.
இந்நிலையில் திடீரென நேற்றிரவு வைத்தீஸ்வரி பள்ளி விடுதியில் உள்ள கழிவறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பசுவந்தனை போலீசார், உயிரிழந்த மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவி தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம்? குறித்து பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
இதில் முதற்கட்ட விசாரணையில், மாணவி குடும்ப பிரச்சினை காரணமாக தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது. இருப்பினும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
குறிப்பு:
[ உங்களுக்கு தற்கொலை எண்ணம் தோன்றினால் உடனே அழையுங்கள்:
மாநில சுகாதார துறை தற்கொலை தடுப்பு உதவி எண் - 104
சினேஹா தற்கொலை தடுப்பு மையம் - 044-24640050
உங்களின் தோழன், தோழியாக பரிவுடன் பேச தயார். உங்கள் தனிப்பட்ட விவரம் வெளியிடப்படாது. பயமின்றி அழையுங்கள். புது வாழ்வை நம்பிக்கையுடன் தொடங்குங்கள்]
English Summary
Student suicide in Thoothukudi