தாய் கண்டித்ததால் மாணவி விஷம் குடித்து தற்கொலை - Seithipunal
Seithipunal


கரூர் மாவட்டத்தில் தாய் கண்டித்ததால் மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் மாவட்டம் முதலைப்பட்டி மொட்டை பழனி தோட்டம் பகுதியை சேர்ந்தவர் ராஜமாணிக்கம். இவரது மனைவி கனகா. இவர்களுடைய மகள் ரம்யா(17) அயிலாபேட்டை பகுதியில் உள்ள பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு படித்து வந்தார்.

இந்நிலையில் சம்பவத்தன்று வீட்டில் இருந்த ரம்யா செல்போன் பார்த்துக்கொண்டு, அதிலேயே மூழ்கி இருந்துள்ளார். இதனை தாய் கனகா கண்டித்துள்ளார். இதனால் மனம் உடைந்த ரம்யா தற்கொலை செய்து கொள்வதற்காக விஷம் குடித்து மயங்கி கிடந்துள்ளார்.

இதையடுத்து ரம்யாவை மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி ரம்யா பரிதாபமாக உயிரிழந்து உள்ளார். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த குளித்தலை காவல்துறையினர், வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Student suicide in karur


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->