இணைய வழியாக நடத்தும் பாடம் புரியாததால் மாணவன் தற்கொலை.! - Seithipunal
Seithipunal


இணைய வழி பாடம் புரியாததால் மன உளைச்சலில் இருந்த பிளஸ் 1 மாணவர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே  கரட்டுப்பட்டி கிராமத்தை சேர்ந்த இளங்கோவன், ஜோதி தம்பதியரின் மகன் விக்கிரபாண்டி(16). இவர், திருச்சியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார். தற்போது கொரோனவால் காலகட்டம் என்பதால் பள்ளி நிர்வாகம் சார்பில் விக்கிரபாண்டிக்கு இணைய வழியில் பாடங்கள் கற்பிக்கப்பட்டு வருகிறது.

 

இந்த நிலையில் இணைய வழி கல்வியில் விக்கிரபாண்டி ஆர்வம் காட்டாமல் இருந்து வந்தாக கூறப்படுகிறது. இதனை தனது தந்தை கண்டித்ததாலும், இணைய வழி பாடங்கள் சரியாக புரியாததாலும் மன உளைச்சலில் இருந்த விக்கிரபாண்டி, வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. 

இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

student suicide for online class


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->